மேலூரில் தனியார் பேருந்து- பைக் மோதல்: பெண் உயிரிழப்பு

மேலூர் பைபாஸில் தனியார் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற பெண் உயிரிழந்தார்.

Update: 2024-01-26 10:11 GMT

உயிரிழந்த பெண்

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை விவசாயக் கல்லூரி அருகே நான்கு வழிச்சாலை பிரிவில், புதுக்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி சென்ற தனியார் பேருந்து. எதிரே மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற இருசக்கர வாகனம் (பல்சர் பைக்) மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளம் பெண், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒத்தக்கடை காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சென்னை அருகாம்பாக்கம் திருக்குமரபுரத்தைச் சேர்ந்த மங்கையகரசி என்பது தெரியவந்தது.

மேலும், இவர் எங்கிருந்து, எங்கே செல்கின்றார் போன்ற விபரங்கள் தெரியாததால், உயிரிழந்த பெண் குறித்த முழுமையான தகவல்களை சேகரிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

மேலும் விபத்தில் உயிரிழந்த பெண் குறித்து, சென்னையில் உள்ள காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருப்பதாகவும், காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News