தனியார் நிறுவன ஊழியர் மாயம்

விழுப்புரத்தில் தனியார் நிறுவன ஊழியர் காணாமல்போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-03-30 06:04 GMT

காவல்துறை விசாரணை


விழுப்புரத்தில் தனியார் நிறுவன ஊழியர் காணாமல்போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் அண்ணா நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேங்கையன் மகன் விக்னேஷ்(26) இவர், ஆன்லைன் டிரேடிங் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு மாலதி(22); என்ற மனைவியும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், கடந்த 27ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற விக்னேஷ் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மனைவி மாலதி புகார் அளித்தார். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News