தனியார் பள்ளி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

பள்ளிபாளையத்தில் தனியார் பள்ளி சார்பில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-06-26 14:05 GMT

விழிப்புணர்வு பேரணி

போதை பழக்கமில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக, பள்ளிபாளையம் காவல் நிலையத்துடன் இணைந்து, பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலை அமைந்துள்ள, தனியார் பள்ளியின் சார்பில் விழிப்புணர்வு பிரச்சார இயக்கமானது நடைபெற்றது.

இதில் தனியார் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், போதையில் நீ வீதியில் குடும்பம்! கள்ளச்சாராயம் ஒழிப்போம் !உன்னை அழிக்கும் போதை எதற்கு !என வாசகங்கள் குறிப்பிட்ட பதாகைகளை ஏந்திய படி, முக்கியசாலைகள் வழியாக பொது மக்களை சந்தித்து, துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .இதில் ஏராளமான மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News