பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பேராசிரியர்கள் அரசு கலைக் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-01-30 11:08 GMT

ஆர்ப்பாட்டம் 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பல்கலைக்கழக, கல்லூரி எஸ்சி., எஸ்டி., ஆசிரியர் மற்றும் பணியாளர் சங்கத்தின் சார்பில், சேலம் அரசு கலைக் கல்லூரி முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பிச்சமுத்து தலைமை வைத்தார். செயலாளர் அருள், கிளை தலைவர் வீரமுத்து, செயலாளர் பூபாலன் பொருளாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலம் முழுவதும் இன்று நடந்த ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தற்செயல் விடுப்பு எடுத்து பேராசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தகுதியான கௌரவ விரிவுரையாளர்களை அவர்களின் தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஈட்டிய சரண் விடுப்பை அனுமதித்து அதற்கான பலன்களை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Tags:    

Similar News