ஈரோடு மாநகராட்சியில் திட்டப்பணிகள் : அமைச்சர் அடிக்கல்

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.71 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அமைச்சர் முத்துசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

Update: 2024-01-07 09:32 GMT

அடிக்கல் நாட்டிய அமைச்சர் 

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.71 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ..வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

மொக்கையம்பாளையம் முதல் கொளத்துப்பாளையம் பிரதான சாலையில் உள்ள ஓடையின் குறுக்கே பொது நிதியிலிருந்து ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியும், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் தண்ணீர்பந்தல்பாளையத்தில் ரூ.46.00 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி பைப் லைன் அமைக்கும் பணியும் என மொத்தம் ரூ.1.71 கோடி மதிப்பீட்டிலான புதிய தட்டப்பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News