போலீஸ் ஏட்டுகளுக்கு பதவி உயர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் 29 போலீஸ் ஏட்டுகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படுள்ளது.

Update: 2024-06-18 06:48 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் 29 போலீஸ் ஏட்டுகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படுள்ளது.


விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போலீஸ் ஏட்டாக பணியாற்றி வரும் 29 பேருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் பரிந்துரையின்பேரில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளித்து விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷாமித்தல் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கோட்டக்குப்பம் மதுவிலக்கு சோதனைச்சாவடி போலீஸ் ஏட்டு குமரன், விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலைய ஏட்டு பார்த்திபன், செஞ்சி முனுசாமி, திண்டிவனம் சோலை, திரு வெண்ணெய்நல்லூர் காளிதாசன், கோட்டக்குப் பம் சம்பத்குமார், விக்கிரவாண்டி தேவநாதன், வளத்தி அக்தர்பாஷா, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய ஏட்டு குகநாதன், கண்டாச்சிபுரம் சுப்பிரமணியன் உள்பட 29 போலீஸ் ஏட்டு கள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
Tags:    

Similar News