சொத்து தகராறு - சகோதரனை துப்பாக்கியால் சுட்டவர் கைது

ஜவ்வாது மலை பகுதியில் சொத்து தகராறில் பெரியப்பா மகனை நாட்டு துப்பாக்கியால் சுட்டவரை கைது செய்த போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-02 08:44 GMT

சம்பத் 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு வலதுலம்பட்டு பகுதியைச் சார்ந்த ராமன் மகன்கள் குள்ள காளி மற்றும் லட்சுமணன் என இரு பிள்ளைகள் உள்ளன இந்த நிலையில் குள்ளகாளியின் மகன் காளி(60) என்பவருக்கும் அவருடைய சித்தப்பா லட்சுமணன் இவருடைய மகன் சம்பத் (36) என்பவருக்கும் இடையே பல வருடங்களாக நில பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.

அதனை தொடர்ந்து நேற்று திரும்பவும் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன் மகன் சம்பத் தான் மறைத்து வைத்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து காளி மீது சுட்டதில் நெஞ்சில் குண்டுகள் பயந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட சம்பத்தை கைது செய்து அவரிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். சொத்துக்காக பெரியப்பா மகனை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tags:    

Similar News