நாகர்கோவிலில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் 

கன்னியாகுமரி மாவட்ட அதிமுக சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-05 04:38 GMT
அதிமுக ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்ட அதிமுக சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மாணவர் அணி செயலாளர் மனோகரன், மாநில மகளிரணி துணைச் செயலாளர் ராணி தலைமை வகித்தனர். இளைஞர் பாசறை செயலாளர் அக்ஷயா கண்ணன் வரவேற்றார்.குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், - தமிழ்நாட்டில் போதை பொருட்கள் விற்பனை செய்வார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டம் வழியாக கனிம வளங்களை கொண்டு செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்ட பிறகும் கனிமங்கள் கடத்தப்படுகின்றன.வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக சார்பில் யாரை வேட்பாளராக நடத்தினாலும் அவர்கள் வெற்றிக்காக கட்சியினர்  உழைக்க வேண்டும் என்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, அனிலா உட்பட ஏராளமானவர்கள்  கலந்து கொண்டார்கள்.
Tags:    

Similar News