தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பழநி அருகே பாலசமுத்திரத்தைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன்(34). மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி. இவரையும், இவரது தாயாரையும் கடந்த 22ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சிலர் தகராறில் தாக்கியதாக கூறப்படுகிறது.

Update: 2024-04-27 05:34 GMT

போராட்டம்

பழநி அருகே பாலசமுத்திரத்தைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன்(34). மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி. இவரையும், இவரது தாயாரையும் கடந்த 22ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சிலர் தகராறில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தெய்வேந்திரன் தரப்பினர் பழநி தாலுகா போலீசில் புகார் செய்தனர். இவரது புகாரின் பேரில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி நேற்று மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் பழநி தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News