இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வி.அலம்பலம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-12-13 11:01 GMT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வி.அலம்பலம் கிராமத்தில் ஊராட்சி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிட கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வி அலம்பலம் கிராமத்தில் ஊராட்சி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் வி.அலம்பலம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையை சீர் அமைத்திடவும், கூலி பாக்கியை உடனடியாக வழங்கிட வேண்டியும், பழைய காலணியில் குடிநீர் விநியோகம் செய்து கொடுக்க வேண்டியும், மேற்கு, தெற்கு, கிழக்கு தெருவிற்கு மின்விளக்கு அமைத்து தர வேண்டியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். கோம்பதுரை, முன்னிலை வகித்தார் மாரிமுத்து கண்டன உரை ஆற்றினார். மேலும் நிர்வாகிகளான பழனி, முருகேசன், ராமச்சந்திரன், ராமசாமி, உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News