தருமபுரியில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தரும்புரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-23 12:27 GMT

கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக முறைகேடு செய்வதாகவும், அதனை தடுப்பதற்கு நாடு முழுவதும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இவிஎம் இயந்திரத்தை பயன்படுத்தாமல், பழைய சீட்டு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, விசிக சார்பில்,

இன்று தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொலைபேசி நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல்களில் வாக்குப்பதிவிற்கு மின்னனு இயந்திரம் பயன்படுத்துவதன் மூலம் பாஜக மோசடி செய்கிறது. பாஜகவின் இந்த மோசடியை தடுப்பதற்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தக் கூடாது.

பழைய முறைப்படி வாக்குச் சீட்டு அமல்படுத்த வேண்டும்.  தேர்தல் ஆணையம் இதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி முழுக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்செல்வன், மண்டல துணை செயலாளர் மின்னல் சக்தி, மாவட்ட செயலாளர்கள் சி.கே‌.சாக்கன் சர்மா, த.கு.பண்டியன், கருப்பண்ணன் மற்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், முஸ்லிம் லீக், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News