சங்கரன்கோவிலில் தபால் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்

சங்கரன்கோவிலில் தபால் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது

Update: 2024-02-16 08:39 GMT
சங்கரன்கோவிலில் தபால் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து தொழிற்சங்கங்களான தொழிலாளர் முன்னேற்ற சங்கம்,சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டிஎஸ்சி உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர்‌ மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்து இராஜபாளையம் சாலையில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்பொழுது மத்திய அரசை கண்டித்தும், மேலும் பொதுத்துறை மற்றும் அரசு துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கப்பட்ட வேண்டாம் என்றும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

Tags:    

Similar News