நாம் தமிழர் நிர்வாகி படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-24 11:03 GMT

ஆர்ப்பாட்டம் 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஒன்றிய நாம் தமிழர் கட்சி தலைவர் சேவியர் குமார் வயது 40 என்பவரை கடந்த வாரம் திமுக நிர்வாகிகள் அடித்து கொலை  செய்ததை கண்டித்து  திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கந்திலி ஒன்றிய செயலாளர் சிவா, தொகுதி பொறுப்பாளர் சதிஷ், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ராஜா தேசிங்கு, மாறபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News