சிவகங்கையில் 354 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிவகங்கையில் நலிவடைந்த இஸ்லாமிய, கிறிஸ்தவ பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Update: 2024-03-14 14:57 GMT

நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலிவடைந்த 354 இசுலாமிய மற்றும் கிறித்தவ பெண்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் வகையில் சுய உதவிக் குழு பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட குறிப்பாக கல்வி உதவித் தொகை, விதவை உதவி தொகை,

மறுவாழ்வு உதவித்தொகையாக ரூபாய் 48,35,000 மதிப்பில் நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் மற்றும் ஏராளமான சிறுபான்மையினர், அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News