மாணவர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கல்

பாதாள செம்பு முருகன் கோவில் அறக்கட்டளை சார்பில் ஆதிராவிடர் பள்ளி, கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டன.

Update: 2024-02-06 04:17 GMT

உதவி பொருட்கள் 

பாதாள செம்பு முருகன் கோவில் அறக்கட்டளை சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் தங்கி படிக்கும் ஆதிதிராவிட பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு ரூ 5 இலட்சம் மதிப்புள்ள பாய்,போர்வை, தலையணைகளை கோவில் நிர்வாகிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் வழங்கினர். இது குறித்து கலெக்டர் பூங்கொடி கூறியதாவது:உதவிப் பொருட்கள் வழங்கிய அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோல பலரும் வழங்கினால் மாணவ மாணவிகள் சிரமமின்றி படிப்பதற்கும், உயர் கல்வி கற்பதற்கும் வழிவகை செய்யும். தொண்டு உள்ளம் கொண்டவர்கள் செய்யும் அனைத்து உதவிகளும் , மாணவ மாணவிகளை சென்று சேரும் என்பதில் சந்தேகம் இல்லை, என்றார்.
Tags:    

Similar News