கடவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

கடவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணாக்கர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2024-02-09 09:26 GMT

மிதிவண்டி வழங்கல் 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கடவூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணக்கர்களுக்கு, தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு பள்ளியின் வளாகத்தில் இன்று கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் காமாட்சி,பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷீலா, கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், கடவூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் வேங்கடம் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், மாணவ- மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தமிழக அரசின் திட்டங்களை விளக்கி கூறி, அதில் மாணாக்கர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் நிதி உதவிகளையும், திட்டங்களையும் விளக்கிக் கூறிய எம்எல்ஏ சிவகாமசுந்தரி, நிகழ்ச்சியின் நிறைவில், பள்ளியில் பயிலும் 137- மாணாக்கர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

Similar News