மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்

திருச்செங்கோடு புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை நகர மன்ற தலைவர் வழங்கினார்.

Update: 2024-01-04 07:06 GMT

மிதிவண்டி வழங்கல் 

திருச்செங்கோடு புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கல் மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்து கொண்டு மிதிவண்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் . செல்வி இராஜவேல் கலந்து கொண்டார். பள்ளியின் தலைமை ஆசிரியர்சாலமோன்ராஜ் தலைமை வகித்தார். கலைத் திருவிழா போட்டிகளில்கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு வழங்கி பேசிய போது கூறியதாவது பள்ளி மாணவ மாணவிகள் நலனுக்காக நமது தமிழ்நாடு முதல்வர் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாணவ மாணவிகள் நன்றாக படித்து திருச்செங்காட்டிற்கு நல்ல பெயரை பெற்றுத் தரவேண்டும். படிப்பு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு ஒழுக்கம் முக்கியம். பெற்றோரை மதிக்க வேண்டும். என கூறினார்
Tags:    

Similar News