கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின் வாரிய கோட்ட அலுவலகங்களில் நடைபெற உள்ள குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-05 04:32 GMT

கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின் வாரிய கோட்ட அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இது குறித்து மேற்பார்வைபொறியாளர் கிருஷ்ணமூர்த்தி விடுத்துள்ள செய்திகுறிப்பில் தீரிவித்துள்ளதாவது, கள்ளக்குறிச்சி மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஜன., மாதத்திற்கான பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இதில் திருக்கோவிலுார் கோட்டத்தில் வரும் 9ம் தேதியும், உளுந்துார்பேட்டை கோட்டத்தில் வரும் 23ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி அப்பகுதி பொதுமக்கள் தங்களது கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை குறைதீர் நாள் கூட்டத்தில் அளித்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News