கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திண்டுக்கல் அருகே கொலை செய்தவரை கைது செய்யக்கோரி நடுப்பட்டி மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2024-05-08 15:07 GMT

திண்டுக்கல் அருகே கொலை செய்தவரை கைது செய்யக்கோரி நடுப்பட்டி மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நடுப்பட்டியில் கூலி தொழிலாளி ஆண்டார் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கரியாம்பட்டி, நடுப்பட்டி கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் தீண்டாமை வன்கொடுமைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை ஆண்டாரின்‌ பிரேதத்தை வாங்க மாட்டோம் என முற்றுகையிட்டனர். இவர்களின் வருகை முன்னிட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Tags:    

Similar News