தோவாளையில் இலவச வீட்டுமனை கேட்டு ஜமாபந்தியில் பொதுமக்கள் மனு

தோவாளையில் இலவச வீட்டுமனை கேட்டு ஜமாபந்தியில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2024-06-12 14:05 GMT

தோவாளையில் இலவச வீட்டுமனை கேட்டு ஜமாபந்தியில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.


கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட  கீழ கேசவன் புதூரில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம்1986 ஆம் ஆண்டு 43 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்த மக்களுக்கு  கேசவன் புதூரில் மனைக்கான இடம் போதுமான அளவில் இருந்தும், 38 ஆண்டுகள் ஆகியும் இதுவரையிலும் பட்டா வழங்கப் பட்டவர்களுக்கு  வீட்டுமனை அளவீடு செய்து ஒப்படைக்கப் படவில்லை.   

இது குறித்து சம்மந்தபட்ட துறையினரிடம் பலமுறை மனு செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.       இந்நிலையில் வீட்டு மனை கிடைக்காத குடும்பங்களுக்கு மனைக்கான இடம் கேட்டு இன்று  தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற  ஜமாபந்தியில் பாதிக்கப்பட்ட மக்கள் மனுகொடுத்தனர்.       

இதில் சிபிஐ எம் கட்சியின்  தோவாளை ஒன்றிய செயலாளர் எஸ்.மிக்கேல், வட்டாரக்குழு உறுப்பினர் எஸ். சக்திவேல், கேசவன் புதூர் கிளை செயலாளர் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News