புதுச்சேரி சிறுமி கொலை - பாஜக அரசு பொறுப்பேற்க வேண்டும்

புதுச்சேரியில், ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது. இந்த கொடூரமான சம்பவத்திற்கு ஆளும் பாஜக அரசு பொறுப்பேற்க வேண்டும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-08 01:20 GMT
,மாணிக்கம் தாகூர் எம்.பி சமூக வலைதள பதிவு 
விருதுநகர் மாவட்டம், புதுச்சேரி மாநிலத்தில், 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலையான சம்பவத்திற்கு, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,புதுச்சேரி மாநிலத்தில் 9 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும்,மன வேதனையையும் தருவதாக உள்ளது.சிறுமியின் பெற்றோருக்கும்,அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை. புதுச்சேரியில், ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது. இந்த கொடூரமான சம்பவத்திற்கு ஆளும் பாஜக அரசு பொறுப்பேற்க வேண்டும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணிக்கம்தாகூர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News