ஸ்ரீ கங்கை அம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா
ஸ்ரீ கங்கை அம்மன் கோவில் கூழ் வார்த்தல் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-30 15:57 GMT
கூழ்வார்த்தல் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கண்ணனூர் மதுரா பழம்பேட்டை நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கங்கை அம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் அம்மன் வேடம் அணிந்து மேல தாளம் முழங்க மாட வீதியில் வலம் வந்தனர்.
இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.