புல்வாமா தீவிரவாத தாக்குதல் 5ம் ஆண்டு நினைவஞ்சலி: எஸ்பி மரியாதை

புல்வாமா தீவிரவாத தாக்குதல் 5ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2024-02-15 07:47 GMT
புல்வாமா தாக்குதல் உயிரிழந்த வீரர்களுக்கு நினைவஞ்சலி

 கிருஷ்ணகிரி மாவட்ட சிஆர் பி எப் கமாண்டர் குழு மற்றும் முன்னாள் மத்திய ஆயுதப்படை நலச் சங்கம் சார்பாக புல்வாமா தீவிரவாத தாக்குதலின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உயிரிழந்த 40 மத்திய சிஆர்பிஎப் வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

துப்பாக்கி, தலைக்கவசம் உடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நினைவு துணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, மற்றும் முன்னாள் சி ஆர் பி எப் கமாண்டர் படை வீரர்கள் மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்த சி ஆர் பி எப் வீரர்கள் 40 பேரின் புகைப்படங்களுக்கு பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக அரசு சார்பில் இடம் ஒதுக்கி தருமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News