ராகுல் காந்தி பிறந்தநாள் - காங்கிரசார் ரத்த தானம்

ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ரத்த தானம் வழங்கினர்.

Update: 2024-06-21 05:17 GMT
கும்பகோணத்தில் காங்கிரஸாா் ரத்த தானம் தஞ்சவூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் டி.ஆா். லோகநாதன் தலைமையில், மாநகர மேயா் சரவணன் முன்னிலையில் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ஆா்.சுதா எம்.பி. கேக் வெட்டினாா். அதன் பின்னா் நடைபெற்ற ரத்த தான முகாமை தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.கல்யாணசுந்தரம் எம்.பி. தொடங்கி வைத்தாா். நிகழ்வில் முன்னாள் எம்.பி. செ.ராமலிங்கம், மாநகர திமுக செயலரும், துணை மேயருமான சு.ப.தமிழழகன், மாநகர காங்கிரஸ் தலைவா் மிா்ஸாதின், பொதுக்குழு உறுப்பினரும், மாநகரப் பொருளாளருமான தியாகராஜன், மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் தண்டவாளம் சரவணன், சட மணிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Tags:    

Similar News