ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-06-30 14:42 GMT

ஆலங்குடி 

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சும் சூழல் ஏற்பட்டிருந்தது இந்த சூழ்நிலையில் திடீரென மழையானது மாலை நேரத்தில் அரை மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்தது. ஆலங்குடி, கல்லாலங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது.

திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடுமையான வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்டிருந்த வெப்பம் குறைந்து மழையின் காரணமாக ஏற்பட்ட குளிர்ந்த சூழலால் ஆலங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News