மயிலாடுதுறையில் பெய்த சாரல் மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2024-05-11 03:58 GMT

மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கோடை மழை பெய்தது. மயிலாடுதுறை, குத்தாலம், கோமல் ஸ்ரீகண்டபுரம், மங்கைநல்லூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மயிலாடுதுறையில் திடீரென்று அரைமணிநேரம் பெய்த பலத்த மழையால் கிடைத்த இடத்தில் மழையில் நனையாமல் இருக்க பொதுமக்கள் ஒன்டினர். மாவட்டத்தில் அடிக்கடி மின்சாரம் தடைசெய்யப்பட்டு விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமலும் வெய்யில் தாக்கத்திலும் பொதுமக்கள் அவதியடைந்து வரும் நிலையில் இன்று பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News