மாநகரப் பேருந்திற்குள் மழை

செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்திற்கு சென்ற மாநகரப் பேருந்திற்குள் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் அவதியடைந்தனர்.

Update: 2024-06-09 06:27 GMT
மாநகரப் பேருந்தில் கொட்டிய மழைநீர்
செங்கல்பட்டு மற்றும் புறநகர் பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், ஒரு வாரமாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு துவங்கிய மழை, இரவு 8:00 மணி வரை, பல்வேறு பகுதிகளில் விடாது பெய்தது. அப்போது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற தடம் எண்: எம் 500 மாநகர பேருந்தின் ஜன்னல் பக்கத்தின் மேற்பகுதியில், மழைநீர் உள்ளே ஒழுகியது. இதனால், பயணியர் நனைந்தபடியே தாம்பரம் வரை பயணம் செய்தனர்.
Tags:    

Similar News