கனமழையால் பள்ளியை சூழ்ந்த மழை நீர் - விடுமுறை அறிவிப்பு

Update: 2023-11-22 10:29 GMT
 பள்ளியை  சூழ்ந்த மழை நீர்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

தமிழகத்தை ஒட்டி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால் தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக கடலோரம் மற்றும் மலையடிவார மாவட்டங்களான இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, சிவகங்கை உள்ள மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக வத்திராயிருப்பு பகுதியில் 11.32 சென்டிமீட்டர் மழை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது. வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மழைநீர் சூழ்ந்ததால் பள்ளி வளாகம் முழுவதும் குட்டை போல் காட்சி அளிக்கின்றது. இதனால் இன்று ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகாராஜபுரம், தம்பிபட்டி, வத்திராயிருப்பை சுற்றியுள்ள விளை நிலங்களுக்குள்ளும் மழை நீர் புகுந்தது.

Tags:    

Similar News