சிவகங்கை அருகே பள்ளியை சூழ்ந்த மழைநீர்

Update: 2023-11-05 14:31 GMT

பள்ளியை சூழ்ந்த மழைநீர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், வாணியங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்படுகிறது. இங்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையம் 30 குழந்தைகளுடன் செயல்படுகிறது. தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால், மழைநீர் செல்ல வழியில்லாமல் பள்ளி வளாகம் முழுவதும் குளம் போல் தேங்கி நிர்க்கிறது.

இதனால் பள்ளி குழந்தைகள் வகுப்பறைக்குள் செல்ல வழியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் பள்ளி வளாகத்தில் தரைத்தளத்தை உயர்த்தி மழைநீர் தேங்காமல் வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News