குருபரப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
கிருஷ்ணகிரி மாவட்டம்,குருபரப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Update: 2024-06-07 09:41 GMT
மழை
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 8 மணி முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதில் குருபரப்பள்ளி, போலுப்பள்ளி, நெடுசாலை,குப்பசிபாறை, மேலுமலை, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை விடிய விடிய வெளுத்து வாங்கியது.
இதனால் தாழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நீண்ட நாட்களுக்கு பிறகு கனமழை பெய்துள்ளதால் இப்பகுதியில் அனைத்து நீர்நிலைகளிலும் வேகமாக நீர் நிரம்பி வருகிறது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.