ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு!

பள்ளிகொண்டாவில் காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

Update: 2024-05-22 08:53 GMT

 ராஜீவ் காந்தி நினைவு தினம் 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளிகொண்டா நகர காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் அக்பர் பாஷா தலைமையில் நகர தலைவர் சிக்கேந்தர் முன்னிலையில் பள்ளிகொண்டா பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜிவ் காந்தி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக உறுதி மொழி ஏற்றனர்.இதில் நகர பொருளாளர் பன்னிர்செல்வம், நகர செயலாளர் சித்திக், ஆஸ்கர், ரிஸ்வான், ஜாபர்கான் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News