ராமர் கோயில் கும்பாபிஷேகம் - பொது விடுமுறை அளிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2024-01-22 05:22 GMT

ஓ.பன்னீர்செல்வம்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது . மத்திய அரசு அலுவலகங்கள் நாளை அரைநாள் மட்டுமே செயல்படும் என ஏற்கனவே அறிவித்த நிலையில் இந்த " அயோத்தி இராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் கண்டு களிக்க ஏதுவாக அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மாநில தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News