கராத்தே போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கம் வழங்கிய ராமதாஸ்

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பதக்கம், சான்றிதழ், கேடயம் வழங்கி வாழ்த்தினார் ராமதாஸ்.

Update: 2023-11-05 09:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் 9-வது மாநில அளவிலான இன்டர்நேஷனல் கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கரூர், திருச்சி, திண்டுக்கல், சேலம், திருப்பூர், மதுரை, தேனி உள்ளிட்ட 7- மாவட்டங்களை சேர்ந்த 4- முதல் 14 வயதுடைய மாணவ- மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் ஏர் ஃபைட் எனப்படும் கட்டா, அடிப்படை பயிற்சியான கிகான்ஸ் முறையில் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் மொத்தம் 380-மாணவ- மாணவிகள் பங்கேற்று தங்களது திறன்களை வெளிப்படுத்தினர். இதில் சிறப்பாக போட்டியில் வெற்றி பெற்ற 120 மாணவ- மாணவிகளுக்கு கேடயம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் பிராஞ்ச் இந்தியா ஹெட் ராம்தாஸ்.

Tags:    

Similar News