ராமநாதபுரம் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் எஸ் டி பி ஐ கட்சி தனித்து அல்லது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து களம் காணும் மாவட்ட செயற்குழுவில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2024-02-20 14:51 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

ராமநாதபுரம் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா எஸ் டி பி ஐ கட்சி இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ரியாஸ்கான் தலைமையில் நடைபெற்றது.

இதில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி பல கட்ட விவாதங்கள் நடைபெற்றது அதன் முடிவாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் ஒன்றாக தமிழ்நாட்டில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் அதிக மக்கள் பிரதிநிதிகளை கொண்ட மாவட்டமாக திகழ்வது இராமநாதபுரம் மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்தோ அல்லது கூட்டணியுடனும் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று மாநிலத்தை கேட்டுக் கொண்டதுடன் ஒருமனதாக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News