ராமநாதபுரம் : சுகாதார பணியாளர்கள் பயணம்

ராமநாதபுரம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பொது சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள 70 பணியாளர்களை நகர மன்ற தலைவர் வழியனுப்பி வைத்தார்

Update: 2023-12-19 06:59 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பொது சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள ராமநாதபுரத்தில் இருந்து 70 பணியாளர்கள் 6 வாகனங்கள் நகர் மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் பாதுகாப்பு பொருட்கள் வழங்கி பாதுகாப்புடன் மீட்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நெல்லை,தூத்துக்குடி மாவட்டத்தில் பொது சுகாதாரப்பணியை மேற்கொள்ளும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம்,ராமேசுவரம்,கீழக்கரை,பரமக்குடி ஆகிய நான்கு நகராட்சியில் 70 தூய்மை பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து பேருந்தில் நகர் மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் வழி அனுப்பி வைத்தார். இதில், துணைத்தலைவர் பிரவீன்தங்கம், நகர மன்ற உறுப்பினர்கள் கமலக்கண்ணன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News