ராமநாதபுரம் தாழ்வாக சென்ற மின்கம்பிக்கு தூண்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி மெய்யன் வலசை சாய்ந்த மின் கம்பத்துக்கு இரும்பு கம்பி கொண்டு தூங்கு கொடுக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

Update: 2024-01-22 15:35 GMT

மின் கம்பத்திற்கு தூண் 

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி மெய்யன் வலசை வழியாக பிச்சைமுப்பன் வலசை கடற்கரை படகு சவாரி சுற்றுலாத்தலமாக இயங்கி வருகிறது. இங்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு மெய்யன்வலசை கிராமத்தில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பியுடன் மின்கம்பம் சாய்ந்து காணப்படுகிறது.

இதனால் ஏற்படும் விபரீதம் குறித்து உத்திரகோசமங்கை மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்படி மெய்யன் வலசை கிராமம் சென்ற மின்வாரிய ஊழியர்கள் சாய்ந்த மின்கம்பத்தை தற்காலிகமாக சீரமைத்து சென்றனர் சுற்றுலா வாகனங்கள் அடிக்கடி சென்று வரும் அப்பகுதியில் சாலையின் வளைவில் இரும்பு மின் கம்பம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

இந்த மின்கம்பத்தை முறையாக பராமரிக்க மின்வாரியம் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் .

Tags:    

Similar News