ராமநாதபுரம்: பொதுமக்கள் தர்ணா

ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவை சேர்ந்த பொது மக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-12-14 13:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா பாரனூர், ஆவரேந்தல், அரசூரணி உள்ளிட்ட வருவாய் கிராமத்தை சேர்ந்த ஆதரவற்ற விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திரனாளிகள், வீடில்லா ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்தனர். 

இதுவரை இலவச பட்டா தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில் விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா செயலாளர் சந்திரன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்மந்தப்பட்டவர்களுடன் வருவாய்த் துறை, காவல்துறை அதிகாரிகள் இலவச பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

Similar News