ராமநாதபுரம்: மழைநீர் அகற்றம்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சிக்கு உட்பட்ட சடை முனியன் வலசை மழைநீர் தேங்கியதால் என்னடி சரி செய்யுமாறு மாவட்ட ஆட்சியின் உத்தரவு கீழக்கரை வட்டாட்சியர் பொற்கால அடிப்படையில் சரி செய்தார்.

Update: 2023-12-20 11:33 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏர்வாடி ஊராட்சி சடைமுனியன் வலசை கிராமத்தில் மழை நீர் தேங்கி இருப்பதால் மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கும் கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்வதற்கும் மிகுந்த சிரமப்பட்டு வருவதாக தகவல்கள் அறிந்து மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணுசந்திரன் உத்தரவின் பேரில் கீழக்கரை தாசில்தார் பழனி குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியை மேற்கொண்டுள்ளார். மண்டல துணை தாசில்தார் பரமசிவம் கீழக்கரை வருவாய் ஆய்வாளர் வேல்முருகன் ஏர்வாடி கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News