கள்ளக்குறிச்சி அருகே சிறுமி பலாத்காரம் குற்றவாளி கைது

கள்ளகுறிச்சி மாவட்டம் அருகே 10 வயது சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளி கைது.

Update: 2024-01-20 06:47 GMT

கள்ளக்குறிச்சி அருகே சிறுமி பலாத்காரம் குற்றவாளி கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த எலவடி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் பழனிசாமி- 38 கூலித் தொழிலாளி. இவர், கடந்த 2020ல் 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் படி, பழனிசாமியை கைது செய்த கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார், அவர் மீது விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் கலா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ், குற்றம் சாட்டப்பட்ட பழனிசாமிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 22,000 ரூபாய் அபராதம் விதித்து, தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக அரசு வழங்கவும் உத்தரவிட்டார். தீர்ப்பை தொடர்ந்து, பழனிசாமி கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News