சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் மாவட்டம், குளத்தூரை அடுத்த ஆா்.வி.எஸ்.நகா் பகுதியைச் சோ்ந்தவா் கா.கனகபாண்டி (26). இவா் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் தெரிவிக்கப்பட்டது.

Update: 2024-07-04 10:02 GMT

சிறை

திண்டுக்கல் மாவட்டம், குளத்தூரை அடுத்த ஆா்.வி.எஸ்.நகா் பகுதியைச் சோ்ந்தவா் கா.கனகபாண்டி (26). இவா் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தாடிக்கொம்பு போலீஸாா், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கனகபாண்டியை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பு வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சரண் குற்றஞ்சாட்டப்பட்ட கனகபாண்டிக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

Tags:    

Similar News