செல்லரப்பட்டியில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: 3பேர் மீது வழக்குபதிவு

திருப்பத்தூர் அடுத்த செல்லரப்பட்டி கிராமத்தில் இளம் பெண்ணிடம் அத்துமீறல் ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-01-25 12:50 GMT

கோப்பு படம் 

திருப்பத்தூர் அடுத்த செல்லரப்பட்டி கிராமத்தில் இளம் பெண்ணிடம் அத்துமீறல் ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு திருப்பத்துார் அருகே கொரட்டி செல்லரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மலர்விழி(23).

இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ் (40).என்பவர், இரு நாட்களுக்கு முன் அத்துமீறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து இளம்பெண் ரமேஷ் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

ஆனால் அவரது குடும்பத்தினர் இளம் பெண்ணை மிரட்டி உள்ளனர். இது குறித்து மலர்விழி கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்துார் அனைத்து மகளிர் போலீசார் ரமேஷ் மற்றும் அவரது மனைவி ராதா, தாய் பரிமளா ஆகிய மூன்று பேர் மீது இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News