ராசிபுரம் ராமசாமி 23 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

ராசிபுரம் ராமசாமி 23 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

Update: 2024-07-05 16:02 GMT

நினைவு நாள் அனுசரிப்பு

நாமக்கல் மாவட்டம், திராவிட இயக்க தீரர் நினைவில் வாழும் இராசிபுரம் கே.ஆர் (எ) கே.இராமசாமி அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று (5.7.2024 - வெள்ளிக்கிழமை) மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ராசிபுரம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி அலுவலகத்தில் நடைபெற்றது.

பொதுவாழ்வில் தூய்மை என்பதை தன் பிறப்பிலே பெற்றவர் இராமசாமி என்று தந்தை பெரியார் அவர்களும், கழகத்திற்கு பெருமை சேர்ப்பவர் இராமசாமி என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், பதலி பெரிதல்ல கொள்கை தான் பெரிது என்று வாழ்ந்து மறைந்தவர் இராமசாமி என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், இரா மசாமி எனக்கு நண்பர் என்று சொல்வதில் எனக்குப் பெருமை என்று இனமான பேராசிரியர் அவர்களும், என்னைப் போன்று பல எளிய குடும்பத்தைச் சேர்ந்த கிராமப் புற மாணவர்களை மருத்துவர்களாக ஆக்கிய உத்தமர் என்று கோவை, ஜெம் மருத்துவமனை, டாக்டர் பழனிவேல் ஆகியோர் புகழ்ந்துள்ளனர். 1968 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களிடமிருந்து சிறந்த கூட்டுறவு வங்கித் தலைவர் விருதும், 1999 ஆம் ஆண்டு முத்த மிழ் அறிஞர் கலைஞர் அவர் களிடமிருந்து மாநில சிறந்த கூட்டுறவாளர் விருதும், இராசிபுரம் ஒன்றிய தி.மு.க. செயலாளராகவும், நாமகிரிப்பேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளராகவும், தலைமைச் செயற்குழு, மற்றும் பொதுக்குழு உறுப்பினராகவும் 1962 முதல் 2000 வரை இராசிபுரம் கூட்டுறவு நில வள வங்கித் தலைவர், தமிழ்நாடு மாநில கூட்டுறவு நில வள வங்கிப் பெருந்தலைவர் என பல பொறுப்புகளை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இராசிபுரம் கே.ஆர் (எ) கே.இராமசாமியின் பேரன் நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமாக கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் இருந்து வருகிறார். திராவிட இயக்க தீரர் நினைவில் வாழும் இராசிபுரம் கே.ஆர் (எ) கே.இராமசாமி அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று (5.7.2024 - வெள்ளிக்கிழமை) மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ராசிபுரம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தலைமை தாங்கினார். நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.இராமசுவாமி, ராசிபுரம் நகர கழக செயலாளர் என்.ஆர்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கே.ஆர் (எ) கே.இராமசாமி அவர்களின் திருவுருவப் படத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன்,

வங்கி செயலாளர் கோவிந்தராஜ், வங்கித் தலைவர் கந்தசாமி ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News