ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ரேஷன் அரிசி பதுக்கியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-06-23 05:47 GMT

கைது

கறம்பக்குடி: கறம்பக்குடி வடக்கு தெருவிலுள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் அங்கு சென்று குறிப்பிட்ட வீட்டின் முன்பு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை சோதனை செய் தனர். அதில் 22 வெள்ளை நிற சாக்கு மூட்டைகளில் சுமார் ஆயிரத்து 100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரேஷன் அரிசி பதுக்கிய அண்ணாமலை என்பவரை கைது செய்த போலீசார் அரிசி மூட்டைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News