ரேஷன் அரிசி கடத்தியவர் கைது - 1 டன் அரிசி பறிமுதல்
உளுந்துார்பேட்டை அருகே ரேஷன் அரிசி கடத்திய நபரை போலீசார் கைது செய்து, ஒரு டன் அரிசியை பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-04-28 08:49 GMT
கைது செய்யப்பட்ட ரவி
உளுந்துார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார், மேப்புலியூர் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒரு டன் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரிய வந்தது. விசாரணையில், கள்ளக்குறிச்சி அடுத்த உலகியநல்லுார் பகுதியைச் சேர்ந்த மூக்கன் மகன் ரவி, 30; என தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து, ஒரு டன் ரேஷன் அரிசியுடன் மினி டெம்போவையும் பறிமுதல் செய்தனர்.