இராயப்பன் பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

இராயப்பன் பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2024-01-29 08:26 GMT

ஆட்சியரிடம் மனு

தேனி மாவட்டம் இராயப்பன்பட்டி ஊராட்சியில் ஊராட்சி நிதியின் மூலம் சில தினம் முன்பு பொதுக் கழிப்பறை கட்டுவதற்கான பணிகள் துவங்கிய நிலையில், தற்போது கட்டிட பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்து தாங்கள் ஊராட்சியில் கேட்டபோது அவர்கள் பதிலளிக்காமல் அலட்சியப்படுத்துகின்றனர். எனவே அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News