பயன்படுத்தாத ரயில்வே குடியிருப்பு பகுதியில் இருந்து ஆண் பிணம் மீட்பு. - கொலையா என விசாரணை.

உதகை மலை ரயில் ஊழியர்கள் குடியிருப்பில் கிடந்த ஆணின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2023-10-24 05:06 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நீலகிரி மாவட்டம் உதகையில் மலை ரயில் நிலையம் உள்ளது . இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினமும் குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்திற்கு மலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் தங்குவதற்காக குடியிருப்புகள் கடந்த சில ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் இன்று வரை அது பயன்படுத்தாமல் அப்படியே உள்ளது. இந்த நிலையில் பயன்படுத்தப்பாடாத ரயில்வே குடியிருப்பு பகுதியில் ஆணின் சடலம் இருந்தது. தகவலறிந்து வந்த உதகை ஜி 1 காவல் துறையினர் இறந்த நிலையில் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்றும் கொலை செய்யப்பட்டு இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News