அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

துவரங்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-02-15 04:59 GMT
துவரங்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே சுரண்டை துவரங்காடு பகுதியைச் சேர்ந்த அழகையா என்பவருக்கு சொந்தமான வயல் அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டது.

இதனை கண்ட வயலுக்கு வேலைக்கு சென்ற பொதுமக்கள் சுரண்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முதற்கட்ட விசாரணையில் இறந்து பத்து நாட்களுக்கு மேல் இருக்க வாய்ப்புள்ளது என தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News