வணிகர் சங்கம் சார்பில் நிவாரண நிதி

மிக்ஜம் புயல் காரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பழனியில் இருந்து வணிகர் சங்கம் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.

Update: 2023-12-08 12:04 GMT

மிக்ஜம் புயல் காரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பழனியில் இருந்து வணிகர் சங்கம் சார்பில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மிக்ஜாம் புயல் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் பழனியில் இருந்து வணிகர் சங்கம் சார்பில் 3லட்சம் ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செயல் பட்டு வருகிறது. மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பழனி மாவட்ட வணிகர் சங்கங்களின் சார்பில் சென்னை புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு, 3லட்சம் ரூபாய் மதிப்பிலான மளிகைப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது‌.

Tags:    

Similar News