வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிவகங்கை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

Update: 2023-12-24 04:54 GMT
நிவாரண பொருட்கள் 
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டம் கிளை சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது என மாவட்ட செயற்குழு முடிவின்படி இன்று தூத்துக்குடி முள்ளக்காடு ஊராட்சியில் இரண்டு லட்சம் மதிப்புள்ள போர்வை, கைலி, அரசி, நைட்டி, பருப்பு, கோதுமை மாவு, சீனி, சேமியா, ரவை, கொசுவர்த்தி ஆகிய பொருட்கள் 200 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர், மாநில தலைவர், தென்காசி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி, சிங்கம்புணரி வட்டார செயலாளர் சுரேஷ் ஆரோக்கியராஜ், இளையான்குடி வட்டாரத் தலைவர் சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News