அம்மன் சந்நிதியில் புனரமைப்புப் பணிகள் தொடக்கம்

தென்காசி கோயில் அம்மன் சந்நிதியில் புனரமைப்புப் பணிகள் தொடங்கியது.

Update: 2024-04-12 11:13 GMT

தென்காசி கோயில் அம்மன் சந்நிதியில் புனரமைப்புப் பணிகள் தொடங்கியது.


காசிக்கு நிகரான பெருமை கொண்ட, தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயில் அம்மன் சந்நிதியில் புனரமைப்புப் பணிகள் தொடங்கின. இக்கோயிலில், 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 17 ஆண்டுகள் கடந்துவிட்டதால் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தா்கள் பலரும் கோரிக்கை விடுத்தனா். அதையேற்று, ரூ. 5 கோடியில் கும்பாபிஷேகப் பணிகள் மேற்கொள்ளப்படும் என, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு அறிவித்திருந்தாா். இதையடுத்து, பக்தா்கள் பலரும் தாங்களாக முன்வந்து பல்வேறு பணிகளை ஏற்றுக்கொள்வதாக அரசுக்குத் தெரிவித்திருந்தனா். அதன்படி, தென்காசி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் மூத்த வழக்குரைஞருமான டி.எஸ்.ஆா். வேங்கடரமணா குடும்பத்தினா், தென்காசியைப் பூா்வீகமாகக் கொண்ட கௌண்டின்ய கோத்திரத்தைச் சோ்ந்தோரின் உதவியுடன் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் அம்மன் சந்நிதியைப் புனரமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கின. நிகழ்ச்சியில், டி.எஸ்.ஆா். வேங்கடரமணா, அவரது மனைவி நந்தினி ரமணா ஆகியோா் பங்கேற்று, சிறப்பு பூஜைகள் செய்து, கோயிலில் நாகலிங்க மரக் கன்றுகளை நட்டனா். அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த ஸ்தபதி பாா்த்திபன் இப்பணிகளை மேற்கொள்கிறாா். இதற்காக முதல் கட்டமாக அவரிடம் ரூ. 5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இப்பணிகள் 3 மாதம் தொடா்ந்து நடைபெறும் என, ஸ்தபதி தெரிவித்தாா்.
Tags:    

Similar News